Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டை மீளக் கட்டமைக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் – பிரதமர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டை மீளக் கட்டமைக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் – பிரதமர்!

Share
Share

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டை முழுமையாக மீளமைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நிலவும் மண் சரிவு அபாயங்கள், மேலும் பல பகுதிகளில் மக்களையும் பாடசாலைகளையும் இடமாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஆகியவை இதற்குக் காரணமாக உள்ளன என்றும் அவர்கூறினார்.

சாதாரண மழையினாலும் கூட மண் சரிவு அபாயங்கள் தூண்டப்படுவதாகக் குறிப்பிட்ட
பிரதமர், இது மீட்பு நடவடிக்கைகளை பெரிதும் சிக்கலாக்குவதாக தெரிவித்தார்.

இந்த காரணிகள் மீளமைப்பு செயல்முறையை தவிர்க்க முடியாத வகையில் நீடிக்கும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என அவர் கூறினார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், சில பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை உறுதிப்படுத்தினார்.

டித்வாவிற்குப் பின்னர் மூடப்பட்ட 1,362 பாடசாலைகளில் 666 பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகா ணங்களில் உள்ள பல உயர் கல்வி நிறுவனங்கள் கடுமை யாக சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...