Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ஒன்றுபட்டுள்ளன எதிரணிகள் – மொட்டுக் கட்சி கூறுகின்றது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ஒன்றுபட்டுள்ளன எதிரணிகள் – மொட்டுக் கட்சி கூறுகின்றது!

Share
Share

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையிலேயே எமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்றது. கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்றிருந்தேன்.
எமது கட்சிக்குரிய தனித்துவங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாத்தபடியே நாம் பயணிக்கின்றோம்.

எனினும்,  நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களை ஒடுக்கி,  வடகொரியா போன்று ஜனநாயகம் அற்ற சூழ்நிலையை  இங்கு ஏற்படுத்துவதற்கு பாரிய முயற்சி இடம்பெறுகின்றது.

இதற்கு ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைவிரித்தாடுகின்றது. தமது கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களைப் பொலிஸுக்கு நியமித்து, தமது தேவைக்கேற்ப பொலிஸாரை பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். எனவேதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...