Home தாயகச் செய்திகள் சாதாரண சாய்வு நிலங்களிலும் மண் சரிவு அபாயம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சாதாரண சாய்வு நிலங்களிலும் மண் சரிவு அபாயம்!

Share
Share

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, 45 பாகைக்கும் குறைவான சரிவு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின்
புவியியல் ஆய்வு துறையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், மண்சரிவு அபாய வலயங்களை மீண்டும் புதியமுறையில் வரைபடமாக்குவது அவசியமானது. பொதுவாக 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் போது 45 பாகை சரிவு கொண்ட பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.

இருப்பினும், தற்போதைய சூழலில் 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் இடங்களில், சரிவு குறைவாக இருந்தாலும் மண் தட்டுகள் கனமாக இருந்தாலும் பெரும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறைந்த சாய்வு கொண்ட பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக்
கண்டறியும் நோக்கில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 12 மாவட்டங்களை மையப்படுத்தி புதிய வரைபடமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் புவியியலாளர்கள், பேராதனை பல்கலைக்கழக புவியியல் ஆய்வுத் துறையின் மாணவர்கள், இதர விசேட ஆய்வுப் பிரிவினர் கலந்துகொள்ளவுள்ளனர் – என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...