Home தாயகச் செய்திகள் ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து! வயோதிபர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து! வயோதிபர் மரணம்!

Share
Share

விபத்தில் சிக்கிய வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ். திருநெல்வேலி – கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

மேற்படி வயோதிபர், கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போது ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதில், படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...