‘நாட்டில் தற்போதுள்ள அவசரகால சட்டம் குறைந்தது இன்னும் இரு மாதங்களுக்கேனும்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’, – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ‘டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த சிலரை அரசாங்கம் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம் – என்றும் அவர் கூறினார்.
Leave a comment