Home தென்னிலங்கைச் செய்திகள் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

Share
Share

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதிப அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், ஐஸ் போதைப்பொருளுக்கு மேலதிகமாக 21 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாகக் கூறினார்.

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு 5 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த படகு கந்தர பகுதியில் இருந்து புறப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில், படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களும், கைதான சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...