யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment