Home தென்னிலங்கைச் செய்திகள் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது – இந்தியாவில் இலங்கைப் பிரதமர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது – இந்தியாவில் இலங்கைப் பிரதமர்!

Share
Share

இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்துரைத்துள்ளார். 

 இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா அளித்த நிதியுதவி தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி, டெல்லியுள்ள இந்துக்கல்லூரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டார். 

இதன்போது, குறித்த கல்லூரியில் தாம் கல்வி கற்ற காலத்தை நினைவூட்டிய பிரதமர், தம்மை மீண்டும் அங்கு வரவழைத்தமை தொடர்பில் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு வழங்கி வரும் கல்விக்கான ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேச விசாரணையை பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள்தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

கொழும்பில் அவசர பேரிடர் நிலை!

கொழும்பு மாநகர சபையின் அவசர பேரிடர் நிலைமை தற்போது அமுலில் உள்ளது.  கடந்த 16 ஆம்...

இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தில் முன்னேற்றம் – IMF!

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு செயன்முறையை அடுத்து இலங்கையின் பொருளாதார செயலாக்கம் முன்னேற்றமடைந்திருப்பதாக சர்வதேச...