Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

Share
Share

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய செவ்வாய்க்கிழமை (14) விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருவர் தங்களது காணியில் பனங்கிழங்கு தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக மண்ணை வெட்டிய போது வெடிபொருட்கள் காணப்பட்டன.

இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது தொடர்பில் பளைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட 40 மோட்டார் எறிக்கணைகள் மீட்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...