பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
குறித்த பெண் ஒரு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சுமார் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. எனினும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்க உத்தரவிட்டார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment