Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் – நாமல் தலைமையில் மாபெரும் பேரணிக்கு எதிரணி தயார்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணில் – நாமல் தலைமையில் மாபெரும் பேரணிக்கு எதிரணி தயார்!

Share
Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மாபெரும் எதிர்ப்பு பேரணியை கொழும்பில் நடத்துவதற்பு தீர்மானித்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து விசேடமாக கலந்துரையாடியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் கொழும்பில் ஒன்றுக்கூடி கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களின் விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபச்சார நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர். இதன் போது சமகால அரசியல் விடயங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைள் உட்பட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. அதே போன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயல்படுவதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சில முக்கியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. இந்தச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து யோசனைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நமால் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் இணக்கத்தை தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தமை குறிப்பிட்டத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...