Home தென்னிலங்கைச் செய்திகள் சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது! – தண்டனை கிடைத்தே தீரும் என்கின்றது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது! – தண்டனை கிடைத்தே தீரும் என்கின்றது அரசாங்கம்!

Share
Share

“ராஜபக்ஷக்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கொழும்பில் இருந்து தங்காலைக்குக் குடியமரச் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒப்பாரி வைக்கின்றனர். அவர்களின் ஒப்பாரியால் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.

ஒப்பாரி வைத்து தப்பிப்பிழைக்கலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல், மோசடிகள் என ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்களுக்குத் தண்டனை கிடைத்தே தீரும்.

மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும் என்று ‘குட்டி ராஜபக்ஷ’ நாமல் கனவு காண்கின்றார். அவர் இழைத்த குற்றங்களை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...