Home தாயகச் செய்திகள் இரும்புக் கம்பியால் மகளைத் தாக்கிய தாய்க்கு மட்டு. நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரும்புக் கம்பியால் மகளைத் தாக்கிய தாய்க்கு மட்டு. நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு!

Share
Share

மட்டக்களப்பில் தனது 16 வயது மகளின் கையினை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

அதன்படி, குற்றவாளியென நிரூபணமாக்கப்பட்ட அந்தத் தாயின் ஒரு குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் அவ்வாறே 3 குற்றங்களுக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறும் நீதவான் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்புக்கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு 2017 ஜூலை 12ஆம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

தண்டணை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைக்காக கடந்த 25ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...