Home தாயகச் செய்திகள் எல்லை நிர்ணயப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

எல்லை நிர்ணயப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை!

Share
Share

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தின் விளைவாக ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 

இதனால், மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், தற்போதுள்ள சட்ட அமைப்பின் கீழ், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய, தேர்தலை நடத்த முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

இல்லையெனில், புதிய எல்லை நிர்ணயம் தேவைப்படும், அல்லது முன்னைய முறையின்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...