Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனாதிபதி அநுர நாட்டை வந்தடைந்தார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுர நாட்டை வந்தடைந்தார்!

Share
Share

ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பானுக்கான விஜயத்துக்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் பயணித்திருந்தனர்.

இந்தக் குழுவினர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் இன்று காலை 9:30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...