Home தென்னிலங்கைச் செய்திகள் ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் குழந்தைகள் 47 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தைகள் 20 பேரும் பெண் குழந்தைகள் 27 பேருமே இவ்வாறு பெண் கைதிகளுடன் சிறைச்சாலையில் உள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 1483 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் 229 பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 184 பேர் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...