Home தென்னிலங்கைச் செய்திகள் ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் குழந்தைகள் 47 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தைகள் 20 பேரும் பெண் குழந்தைகள் 27 பேருமே இவ்வாறு பெண் கைதிகளுடன் சிறைச்சாலையில் உள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 1483 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் 229 பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 184 பேர் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...