Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

Share
Share

கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரது சடலம் திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மீட்கப்பட்டன. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பிற்பகல் 5.20 மணியளவில் பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இறுதியாக கறுப்பு நிற அறை காட் சட்டையும், கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய தெஹிவளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...