Home தாயகச் செய்திகள் பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Share
Share

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்ட அறிக்கையில் திருத்தம் செய்யப்படாமையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

சபையின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட நிலையில் அதனைத் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியில் ஒன்றான ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவிர்ந்த ஏனைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு), தேசிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள்  ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த போதிலும் ஆட்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 9 பேரும் ஈ.பி.டி.பி. ஒருவருமாக பத்து உறுப்பினர்கள் சகிதம் மாதாந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...