Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை!

Share
Share

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டை, ஒரு நபரின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்கும் என்றும் மரபணு தரவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆவணச் சான்றிதழின் தேவையும் குறைவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டை அமுலுக்கு வந்ததன் பின்னர், நிகழ்நிலை மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...