Home தாயகச் செய்திகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!

Share
Share

அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வான் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வானில் பயணித்த, முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும் புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் என்ற இளைஞர்கள் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பயணித்தவர்களில் ஏனைய இருவரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகின்றது.

வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...