Home தாயகச் செய்திகள் நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்பு!

Share
Share

தமிழர்களின் பாரம்பரிய சொத்தான யாழ். நல்லூரில் அமைந்துள்ள  மந்திரிமனையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க விரும்புகின்ற நலன் விரும்பிகள் இணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை மந்திரிமனைக்கு முன்னால் நடத்தினார்கள்.

இதில் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும், தமிழர்களின் சின்னங்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அத்துடன் மந்திரிமனை அமைந்துள்ள அந்த நிலத்தைக் காணி உரிமையாளர் நல்ல நோக்கம் கருதிக் கையளிக்க வேண்டும் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.  

தொடர்ந்தும் அசமந்தப்போக்குகள் தொடருமானால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தாங்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...