தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த இவர், வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான கனகசபை, 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment