Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலும் சஜித்தும் அப்பா, மகன் போல் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வந்துள்ளது என்கிறார் மனோ!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலும் சஜித்தும் அப்பா, மகன் போல் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வந்துள்ளது என்கிறார் மனோ!

Share
Share

ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் அப்பாவும் மகனும் போன்று என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அப்பாவும் (ரணில்) மகனும் (சஜித்) ஒன்றிணையும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை வெளியில் இருந்து நாம் செய்து வருகின்றோம்.” – என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஓர் இல்லம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகும்.

நான் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் அவருடன் இருந்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சி உடைந்த போதும் நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.”

“எதிரணிகள் ஒன்றிணைவதற்கு முற்படும்போது கள்வர்கள் ஒன்றிணைகின்றனர் என ஆளுந்தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இங்கு களவு, மோசடிகளுக்கு இடமில்லை. எனவே, அனைவரும் கள்வர்கள் எனக் கூறுவதை ஆளுங்கட்சி நிறுத்த வேண்டும்.

கள்வர்களைப் பிடிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இது தொடர்பான நடவடிக்கைகள் சட்ட பூர்வமாகவே இடம்பெற வேண்டும். கள்வர்கள் யாரென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...