Home தென்னிலங்கைச் செய்திகள் ‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

Share
Share

‘லங்காதீப’ ஊடகத்தின் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குச் சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம, அநுராதபுரம் – பொல்பிதிகம பிரதேசத்தில் குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்து ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம உடல்நலக் குறைவு காரணமாக ஏற்கனவே சத்திர சிகிச்சை பெற்றவர் எனவும், ஆனாலும் தொடர்ந்து ஊடகக்  கடமைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் காரணமாக மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகமவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்தத் தாக்குதலின்போது ஊடகவியலாளரைக் காப்பற்றச் சென்ற அவரது மனைவியும் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம தொடர்பில் கண்காணித்து சந்தேகநபருக்குத் தகவல் வழங்கி குற்றத்துக்கு  உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...