செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாற்றத்துக்கான இளையோர் குரல் அமைப்பால் யாழ். மருதனார்மடம் பகுதியில் இன்று காலை இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள், மருதனார்மடம் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Leave a comment