Home தாயகச் செய்திகள் ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து! வயோதிபர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து! வயோதிபர் மரணம்!

Share
Share

விபத்தில் சிக்கிய வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ். திருநெல்வேலி – கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

மேற்படி வயோதிபர், கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போது ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதில், படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...