Home தென்னிலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராகவும் பிரேரணை கொண்டு வருவோம் – நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகவும் பிரேரணை கொண்டு வருவோம் – நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

Share
Share

“நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை நேற்று புதன்கிழமை சபையில் தெளிவுபடுத்திய பின்னரே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத்தில் 1978 இல் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் உப ஜனாதிபதிக்கு எதிராகக் கூட இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தில் எதிரணிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நேரிடும்.

ஆகவே, தனது முடிவை சபாநாயகர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...