Home தாயகச் செய்திகள் தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

Share
Share

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அந்தச் சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவில் பூலார் குடியிருப்பு காட்டுப் பகுதியில் கடந்த மாதம் 19ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொது வைத்திசாலையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அல்லது விவரத்தை அறிய விரும்புவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

இது வரையில் இந்தச் சடலத்தைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அறியத் தரவும் என மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...