Home தாயகச் செய்திகள் தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

Share
Share

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அந்தச் சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவில் பூலார் குடியிருப்பு காட்டுப் பகுதியில் கடந்த மாதம் 19ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொது வைத்திசாலையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அல்லது விவரத்தை அறிய விரும்புவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

இது வரையில் இந்தச் சடலத்தைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அறியத் தரவும் என மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...