Home தென்னிலங்கைச் செய்திகள் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!

Share
Share

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. 

எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று மின்சார சபையின் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். 

சட்டப்படி வேலை செய்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கை அதன் முதல் கட்டமாக 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடரும். 

மின்சார சபையை மறுசீரமைப்பதில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற அணுகுமுறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார். 

சமீபத்தில் அமைச்சருடனும் இதுகுறித்து விவாதித்த போதும் வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...