Home தென்னிலங்கைச் செய்திகள் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!

Share
Share

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. 

எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று மின்சார சபையின் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். 

சட்டப்படி வேலை செய்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கை அதன் முதல் கட்டமாக 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடரும். 

மின்சார சபையை மறுசீரமைப்பதில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற அணுகுமுறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார். 

சமீபத்தில் அமைச்சருடனும் இதுகுறித்து விவாதித்த போதும் வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...