Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?

Share
Share

கொழும்பு, விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் குழு கலந்து கொண்ட சமீபத்திய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2025 ஜூன் 16 ஆம் திகதியன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அத்துடன், தேவையான சட்டத்தைத் தயாரிப்பதற்கான பணிகள் சட்ட வரைஞருக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டவுடன், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவும் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...