Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?

Share
Share

கொழும்பு, விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் குழு கலந்து கொண்ட சமீபத்திய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2025 ஜூன் 16 ஆம் திகதியன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அத்துடன், தேவையான சட்டத்தைத் தயாரிப்பதற்கான பணிகள் சட்ட வரைஞருக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டவுடன், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவும் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...