Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.தே.கவின் 79 ஆவது நிறைவு விழா!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐ.தே.கவின் 79 ஆவது நிறைவு விழா!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்குக் கட்சியின் முகாமைத்துவக்  குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவக் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் மாலை ஆணொருவரின்...

ஒரு புறம் கொலை! மறுபுறம் மிரட்டல்!! – அரசைக் கடுமையாகச் சாடுகின்றார் சஜித்

“நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து...

அரசியல் கைதிகளின் விடுவிப்பை வலியுறுத்தி காசியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்ட விடுதலை நீர்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித...

செம்மணி விவகாரம்; ஐ.நா பேரவையிடம் விளக்குகிறதாம் அரசாங்கம்!

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து...