Home தென்னிலங்கைச் செய்திகள் மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

2010இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்-

மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு அரசு மேற்கொண்ட பயணத்தின்போது, 65 பேர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை நாம் மன்னிக்கவில்லை. அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய அரசின் செயல்பாட்டை
ஆதரிக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது தலைவிதியைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...