யாழ்.பருத்தித்துறையில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் காணாமல்போனவர் தொடர்புடைய ஒரு விடயத்தை விசாரிக்க தங்கள் அதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நபர்கள் நால்வர், அவர்களைப் பின் தொடர்ந்ததாகவும் அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில்
அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை செய்த
போது குற்றப் புலனாய்வுப்பிரிவினரை பின் தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர்உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை
அதிகாரிகளிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
Leave a comment