மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 வயது குழந்தை அதிஸ்ட வசமாக உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தை அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Leave a comment