Home தென்னிலங்கைச் செய்திகள் வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அரசாங்கம்!

Share
Share

“வடக்கு தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் ஆணை வழங்கினர். அந்த மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். எமது பிரச்சினையை அரசு உணர்ந்துள்ளது, எனவே, நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டால்தான் பிரச்சினைகள் முழுமையாகத் தீரும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீதியமைச்சர்!

வடக்கு, கிழக்கில் ஆயுதப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....