Home தென்னிலங்கைச் செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் உறுதி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் உறுதி!

Share
Share

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாதத்  தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

அந்தவகையில் செப்டெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றைப்  பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.

அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின்...

லலித் – குகன் விவகாரம்; CID விசாரிக்கிறது!

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத்...

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி!

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பெறுமதி சேர்...

அதிகரித்த வாகன இறக்குமதி தொடர்பில் எச்சரிக்கை!

எதிர்பார்த்ததை விட அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் ஏற்படப்போகும் பாதக நிலை தொடர்பில் கவனம் செலுத்த...