Home தென்னிலங்கைச் செய்திகள் வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

Share
Share

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், குறித்த விபத்துகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை என தெரிவித்த அவர், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பயனளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்நோக்கிச் செல்லும்போது, விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

விபத்து தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக விபத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்படும் தாக்கங்களையும், குறைக்க முடியுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...