Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!

Share
Share

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் படுகாயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பகுதியை இன்று நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி!

மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தைக் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி...

தங்காலையைச் சென்றடைந்த மஹிந்த – ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பு!

அம்பாந்தோட்டை, தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ...

பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!

இலங்கையின் பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு...

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...