Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் நாளை தொழில் வாய்ப்பு முகாம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நாளை தொழில் வாய்ப்பு முகாம்!

Share
Share

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளை சனிக்கிழமை மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில் முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்
விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ். ஊடக அமையத்தில் இன்று தெரிவித்தார்.

ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் மேலும் கூறுகையில்,

“பல தொழில் சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.

இந்த முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர், யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போர் வருகை தரவுள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...