Home தாயகச் செய்திகள் மோட்டார் குண்டைப் பிரித்த இருவர் கிளிநொச்சியில் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் குண்டைப் பிரித்த இருவர் கிளிநொச்சியில் படுகாயம்!

Share
Share

மோட்டார் குண்டை பிரித்து அதிலிருந்த வெடிமருந்தை எடுக்க முயன்றபோது, அது வெடித்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி – ஆனையிறவு – தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கச்சாயை சேர்ந்த சிங்கராசா அனுராஜ் (வயது 26), கேதீஸ் (வயது 50) ஆகியோரே படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

படுகாயமடைந்தவர்களில் ஒருவரான அனுராஜ் தனது தாயாரின் வீட்டுக்கு படுகாயமடைந்த மற்றையவரையும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அந்தப் பகுதியில் வெடிக்காத குண்டுகளை எடுத்து அவற்றிலிருந்து வெடிமருந்து சேகரித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் நேற்றைய தினம் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை எடுத்து அதனைப் பிரித்து, அதிலிருந்த வெடி மருந்தை எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அந்தக் குண்டு வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்தனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவருக்கு இரு கால்களும் கடுமையாக சிதைந்தமையால் சத்திர சிகிச்சை மூலம் அவை வெட்டி அகற்றப்பட்டன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...