Home தென்னிலங்கைச் செய்திகள் பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

Share
Share

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8 மணிவரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்

பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் காணாமல்போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 18 பேரும், கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர். அந்த மாவட்டங்களில் முறையே 6 மற்றும் 24 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த அனர்த்தங்களால் நாடு முழுவதும் 234, 503 குடும்பங்களைச் சேர்ந்த 833, 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 34,198 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் 919 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று மாலை 6 மணிவரை மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்

பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் காணாமல்போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும், கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர். அந்த மாவட்டங்களில் முறையே 4 மற்றும் 24 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த அனர்த்தங்களால் நாடு முழுவதும் 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் 798 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...