Home தாயகச் செய்திகள் பிள்ளையானின் சகா கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிள்ளையானின் சகா கைது!

Share
Share

பிள்ளையானின் நண்பரான அஜித் என்பவர் மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவங்கள் தொடர்பிலேயே அஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் நண்பரான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் குவைத் நாட்டுக்குத் தப்பி ஓடித் தலைமறைவாகி இருந்தார்.

இந்தநிலையில், அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...