Home தாயகச் செய்திகள் பிரம்படி படுகொலை நினைவேந்தல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

Share
Share

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

பிரம்படி வீதி ஆரம்பிக்கும் இடத்தில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

நினைவுத் தூபிக்கு பொதுச்சுடர் ஏற்றப் பட்டு, மலர் மாலை அணிவித்து மலர் தூவி இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவு கூரப்பட்டனர்.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், படுகொலையானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், படுகொலையான மக்களின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்திய அமைதிப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பவான் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, 1987 ஒக்ரோபர் 11, 12ஆம் திகதிகளில் பிரம்படிக்குள் நுழைந்த இந்திய படையினர் அப்பாவி பொதுமக்களை உயிருடனும் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களையும் வீதியில் படுக்கவைத்து கவச வாகனங்களால் ஏற்றி நசித்துக் கொன்றனர்.

இவ்வாறு சுமார் 50 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் நிகழ்த்திய முதலாவது படுகொலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...