Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழரசுக்கட்சி தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

Share
Share

தமிழ் மக்கள் நிராகரித்து இலங்கைத் தமிழரசு கட்சியே கைவிட்டதாகக் கூறிய ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது அந்த கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் துரோகச் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது பின் வாசலால் பிரவேசித்து தமிழரசுக் கட்சியில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியுடன் அண்மையில் நடந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் ஒற்றையாட்சியையே வலியுறுத்தினர் எனவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...