Home தாயகச் செய்திகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!

Share
Share

காற்றாலை மின்சார திட்டம், கனிம மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நமது நாடு – நமது மன்னார் – நமது போராட்டத்தின் கோரிக்கைகள்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் எந்தவோர் இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது, அமைக்கப்பட்ட (தம்பபன்னி, நறுவிலிக்குளம்) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத் திருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...