Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

Share
Share

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, ஆதரவாக 151 பேர் வாக்களித்ததுடன், எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் வாக்களித்தார்.

அத்துடன், வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த எந்தவொரு உறுப்பினரும் வாக்களிப்பை தவிர்க்கவில்லை.

அதேநேரம், மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை 11.30 முதல் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது.

இதனிடையே, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...