Home தாயகச் செய்திகள் செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருள்களைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய பரல் ஒன்று குண்டு செயலிழக்கும் பிரவினரால் மீட்கப்பட்டுள்ளது. அது ஏ.கே. அல்லது எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிக்குப் பய்ன்படுத்தப்படும் ட்ரம் மகஸின் (ரவைக் கூடு) எனச் சம்பந்தப்பட்ட தரப்புகளால் அடையாளம் காணப்பட்டது என அறியவந்தது.

ஆயினும் அந்த ட்ரம் மகஸினுக்குள் ரவைகள் நிரப்பப்பட்டிருந்தனவா அல்லது அது வெற்று மகஸினா என்பது தெரியவரவில்லை.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாளான நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் புதைகுழியில் இருந்து சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வருகை தந்து அந்தச் சந்தேகத்துக்கிடமான பொருளை அகழ்ந்தெடுத்தனர். பின்னர் அது நீதிமன்றக் கட்டுக்காவலில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ஆய்வின் பிற்பாடு அது தொடர்பான தகவல்கள் உறுதிப்பாடாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...